ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்! எல் முருகன் பரபரப்பு பேட்டி!
L MURUGAN TALK ABOUT ASSEMBLY ELECTION
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றன.
கடந்த வாரம் திமுக இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளது. மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் முதல் நாள் மட்டும் 30,000 பேர் இணைந்து உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதேபோல், இரு தினங்களுக்கு முன்பு அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என்று, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றிபெறும் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம் என்றும் எல் முருகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
L MURUGAN TALK ABOUT ASSEMBLY ELECTION