வசமாக சிக்கிய நாராயணசாமி.! வச்சி செய்யும் கிரண்பேடி.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டி உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து இருக்கின்றார்.

முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர், காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொண்டனர். அது குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் கிரண்பேடி பகிர்ந்து மோட்டார் வாகன சட்டம் உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் மிகவும் வெட்கக் கேடான முறையில் மீறப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு இருக்கின்றார்.

புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி தன்னுடைய டுவிட்டர் பதிவில் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால், அமர்ந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு பிறருக்கு உபதேசம் செய்யும் முன் தான் கடைபிடிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kiranbedi about narayana samy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->