#சற்றுமுன் || பாமக.,விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள்., தலைமை வெளியிட்ட அறிவிப்பு.!
kattumannarkovil pmk member Dismissal
பாட்டாளி மக்கள் கட்சியின் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணன், ஜெ. செல்வம் என்கிற தமிழ்ச்செல்வன், மேல பழஞ்சநல்லூரைச் சேர்ந்த க. வரதன் ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால்,
இன்று (10.02.2022) வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அவர்கள் மூவரும் நீக்கப்படுகிறார்கள்.
அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்"
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kattumannarkovil pmk member Dismissal