ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், இரண்டு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டுள்ளது.

அதில், கோலார் தங்க வயல் தொகுதியில் களமிறக்கப்பட்ட ஆனந்தராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட கே. குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.

காந்திநகர் தொகுதி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் கே குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இன்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்த அம்மாநில அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்தனர். முறைகேடாக அதிமுகவின் பெயரை பயன்படுத்திய காந்தி நகர் வேட்பாளர் குமாரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உரிய விளக்கத்தை தரவில்லை என்றால் வழக்கு அல்லது வேட்புமனு நிராகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election OPS side candidate EC Notice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->