கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
kanimozhi mp case in supreme court new order
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.
அந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக சேர்ப்பில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சௌந்தராஜன் மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
சந்தான குமார் மனுவை விசாரிக்க தடை கோரி உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்த வழக்கை விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கனிமொழி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
kanimozhi mp case in supreme court new order