எல்லாம் அதுக்காக தான்.! அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது விபரீதம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, பாங்கு ஒலி சத்தத்தை கேட்டு திடீரென்று தொழுகையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை பட்டினப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப் பட்டது. 

அப்போது செய்தியாளர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென்று தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலி ஓசை கேட்டு செய்தியாளர் சந்திப்பை உடனடியாக பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனை தொடர்ந்து, சற்று நேரத்தில் அமைதியான அவர், பின்னர் தொழுகையில் ஈடுபட்டு உள்ளார். தொழுது முடித்து விட்டு மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்துள்ளார்.

இதனை எதிர்க்கட்சி தரப்பினர், சிறுபான்மையினரின் வாக்குகளை பெற ஜெயக்குமார் போடும் நாடகம் என்று கிண்டல் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar pressmeet in pattinapakkam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->