உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. அப்செட்டான இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.! ஆடிப்போன அதிமுகவினர்.!!
intelligence report ops and eps shock
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது பாஜக அரசு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வருகிறது. அதிமுகவினர் சில கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இம்முறை உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறையும் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.
இதனால் அதிமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக தலைவர்களை பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அதிமுக தரப்பு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
intelligence report ops and eps shock