யார் துரோகி !! திமுகவின் இலக்கு மது விற்பனை ஒன்றே ..அன்புமணி ஆவேசம் !! - Seithipunal
Seithipunal


2024ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது  பாமக. கடந்தமுறை தருமபுரி தொகுதியில் போட்டிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் .இந்நிலையில்,நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிடக்கட்சிகளை அழிக்கவும் , எதிர்கால நோக்கத்தை கருத்தில் கொண்டுடே பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பாமக என்றார்.பாமக துரோகம் செய்தாக எடப்பாடி பழனிசாமி கூறிகொண்டுவருவது வேடிக்கையாக உள்ளது.வன்னியர்களுக்கான 10.5% இடஓதிக்கிட்டை  முறையான தரவுகள் இல்லாமல்  கொடுத்து எங்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் , ரத்துசெய்யப்பட்டபோது , வாயை திறக்காமல் இருந்து துரோகம் செய்தது யார்? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பினார் அன்புமணி.

தொடர்ந்துபேசுகையில், ஆளும் திமுகஅரசுக்கு மக்கள்,பொருளாதாரம்,சுகாதாரம் மட்டும் வேளாண்துறை என்று எதைப்பத்தியும் தெரியாது. திமுக அரசுக்கு ஒரே இலக்கு டாஸ்மாக் மது விற்பனையை அதிகப்படுத்துவது மட்டுமே அவர்களின் நோக்கம்  என்று மிக காட்டமாக குற்றம்சாட்டினார் பாமக தலைவர் அன்புமணி.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Increase in sale of alcohol in Tamil Nadu..Anbumani accused


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->