."கொலை வழக்கில் விடுதலை... ஆனாலும் சிறையில்தான்!": குர்மீத் ராம் ரஹீம் சிங் வழக்கில் திருப்பம்!
High Court Acquits Ram Rahim in Journalist Murder Case Rape Sentence Continues
'தேரா சச்சா சவுதா' தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு:
கொலை வழக்கு: 2002-ல் ஆசிரமத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி வீட்டின் முன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கை: 2019-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், நீதிபதி விக்ரம் அகர்வால் தலைமையிலான அமர்வு இவரை இன்று விடுவித்தது.
மற்றவர்கள் நிலை: குர்மீத் சிங் விடுவிக்கப்பட்டாலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
:கொலை வழக்கில் விடுதலை கிடைத்தாலும், பாலியல் குற்றங்களுக்காக அவர் சிறையிலேயே இருப்பார். இருப்பினும், 2017-லிருந்து இதுவரை 15 முறை பரோலில் வெளிவந்து, சுமார் 320 நாட்களைச் சிறைக்கு வெளியே அவர் கழித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
High Court Acquits Ram Rahim in Journalist Murder Case Rape Sentence Continues