அந்தர் பல்டி அடித்த பாஜக மூத்த தலைவர்., பெரும் அதிர்ச்சியில் பாஜக தலைமை.!
hariyana bjp leader support to farmers protest
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24வது நாளாக டெல்லி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஹரியாணா பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பீரேந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஹரியாணா பாஜகவின் மூத்தத் தலைவர் பீரேந்தர் சிங் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பொருளாதார நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், நான் அவர்களுடன் நிற்பது தார்மீக பொறுப்பு என்று கருதுகிறேன்.
விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி - ஹரியாணா எல்லை பகுதிகளில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் தான் ஈடுபட போகிறேன்" என்று பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
hariyana bjp leader support to farmers protest