த.மா.கா.வின் முக்கிய நிர்வாகி காலமானார்.. ஜிகே வாசன் அஞ்சலி.!! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில சிறப்பு அழைப்பாளர். சிவ.நாவுக்கரசு அவர்கள் உடல்நிலை குறைவால் அண்மையில் காலமானர்.

இதையொட்டி நேற்று 16.05.2022  அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது அவருடன் விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி  வட்டம், சித்தலாங்குடியிருப்பை சேர்ந்த த.மா.கா மாநில இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி அவர்களின் தகப்பனார் அவர்கள் அண்மையில் உடல்நிலை குறைவால் காலமானார்.

அதனையொட்டி நேற்று 16.05.2022  அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரது புகைப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் T.மோகன்ராஜ், 
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் R.L. தமிழரசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டு அன்னாரது புகைப்படத்திற்கு அஞ்சலி  செலுத்தினார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan mourning for tmc member


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->