#சென்னை : 3 தடுப்பூசி போட்டுட்டேன், ஏன் முக கவசம் அணிய வேண்டும்? கேள்வி கேட்ட டிஎஸ்பி., யின் வாகனத்தையே பறித்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


மூன்று முறை தடுப்பூசி செலுத்திய பின்னர், ஏன் முக கவசம் அணிய வேண்டும்? என்று ,டிஎஸ்பி ஒருவரே காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் காவல் பயிற்சிக் கல்லூரியில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் சபாபதி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற டிஎஸ்பி சபாபதியை, சென்னை அண்ணாநகரில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் வழிமறித்து, ஏன் முக கவசம் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், முககவசம் அணியாமல் வந்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று சபாபதியிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, "மூன்று முறை தடுப்பு ஊசி செலுத்திய பிறகு, எதற்காக நான் முக கவசம் அணிய வேண்டும்? என்று சபாபதி, காவலர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், அவர் டிஎஸ்பி என்பதை அறியாத சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவருக்கு முகக்கவசம் அணியாதற்கான ரசீதை அவரிடம் ஒப்படைக்க முயன்றனர். தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரது வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FACE MASK ISSUE DSP POLICE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->