விறுவிறுக்கும் சட்டமன்ற தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் நாளை வாக்குப்பதிவு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்  ஆகிய மாநிலங்களில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை  ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஒய்வு பெற்ற நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வெளியேறுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவுற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில்,
நாளை அங்கு மீதமுள்ள 38  தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Exciting assembly elections voting tomorrow in maharashtra jharkhand


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->