முன்னாள் எம்.பி-யின் மகள் டெபாசிட்டை இழந்து தோல்வியை தழுவினார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 9,624 ஊராட்சிமன்ற தலைவர், 76,746 ஊராட்சிமன்ற உறுப்பினர், 5,090 ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் 515 மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் எம்.பி அன்வர்ராஜா மகள் தோல்வியடைத்துள்ளார்.  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 2வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ராவியத்துல் அதாரியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல் டெபாசிட்டை இழந்தார்.

முன்னாள் எம்.பி-யின்  மகள் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு டெபாசிட்டை இழந்திருப்பது  அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mp anwar raja daugter lost election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->