ராமநாதபுரத்தில் களமிறங்கிய "5 ஓ.பி.எஸ்-கள்" .. பாயிண்ட் பிடித்த ஈ.பி.எஸ்.!! அடடே..
EPS opinion on 6 ops contest in Ramanathapuram
மதுரையில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக 5 பன்னீர் செல்வங்கள் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதனால் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் ஐந்து பேருமே தகுதியானவர்கள். எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்" என பதில் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தான் மற்ற பன்னீர் செல்வங்களை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
EPS opinion on 6 ops contest in Ramanathapuram