இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி - ஓபிஎஸ் உடன் சந்திப்பு!
eps muthukaruppan meet ops
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் ஒன்றையும் பொதுக்குழு நிறைவேற்றியது.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்புப்படி, பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி திறப்புக்கு ஆதரவாக அமைந்தது.
இதனை அடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுக்குழு தொடர்பான மேலும் ஒரு வழக்கை சேர்த்து, தசரா பண்டிகை முடிந்த பிறகு விசாரணை செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் வழக்கின் இறுதி முடிவு வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உறுதி அளித்தனர். உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணை, ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அமைந்ததாக அவரின் ஆதரவாளர்கள் கொக்கரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பக்கம் ஆதரவாக இருந்து வந்த முன்னாள் எம்பி முத்துக்கருப்பன், இன்று ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், அவர் ஓபிஎஸ் அணிக்கு தாவியதாகவே சொல்லப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர் தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eps muthukaruppan meet ops