வெற்றி வாய்ப்பு உள்ளவருக்கே சீட்.. காரர் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி.!!
eps give chance in lok sabha election who have chance to winning
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மக்களவை தேர்தல் பணிகள் தீவிடமடையும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் பலமான தேர்தல் கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்திப்போம் என ஏற்கனவே அதிமுக தரப்பு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு கட்சி மேலிடம் தொடங்கி அடிமட்ட நிர்வாகிகள் வரை பரபரப்பை கிளப்பியுள்ளது.
English Summary
eps give chance in lok sabha election who have chance to winning