வெளிநாடு செல்வதற்கு முன்னர், முதல்வர் கேட்ட ஒரு கேள்வி! வாய் அடைத்துப்போன ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணம் செல்கிறார். இந்தப் பயணத்தின் மூலம் வெளிநாட்டு  தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க என்று தெவிக்கின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்திற்காக, இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும் என்று கூறினார்.

மேலும், இந்தப் பயணம் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்ற விவரத்தைப் பின்னர் அறிவிப்போம். இந்த சுற்று பயணம் தொடர்பாக ஸ்டாலின் விமர்சனம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஸ்டாலின் அடிக்கடி சொந்த விஷயமாக வெளிநாடு செல்கிறாரே, அது ஏன் ?. அவர் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறார? நான் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வெளிநாடு செல்கிறேன் எனப் பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy press meet in mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->