கையாளாகாத முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனங்கள் - எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மேலும் அவரின் மற்றொரு டிவிட்டர் பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.

விடியா ஆட்சியில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைவர்களின்  சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.

டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,பெண்கள், பொதுமக்கள்,தலைவர்கள் சிலைகளென யாருக்குமே பாதுகாப்பில்லாத இந்த ஆட்சியில் இனியேனும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் விழிப்புடன் செயல்படவும், இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi K Palaniswami condemn to lady police abuse dmk member


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->