ஜாமின் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த ED.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் 34 முறை க்கு மேல் நீட்டிக்கப்பட்ட உள்ள நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளார் செந்தில் பாலாஜி. தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தக்கல் செய்த மேல்முறையீட்டு மனம் மீது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில் செந்தில் பாலாஜிக்கு இந்த சமயத்தில் ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்றும், வழக்கு தொடர்புடைய சாட்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது எனவும் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அமலா குத்தலை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED apposed senthil Balaji bail petition in SC


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->