பானை சின்னம் ஒதுக்க முடியாது.. விசிகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மக்களவை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கப்பட்டு இருந்தது. 

அதன் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காததால் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. 

இந்த நிலையில் பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று மாலைக்குள் முடிவெடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 

இதேபோன்று நாம் தமிழர் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னம் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI refused pot symbol request of Vck


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->