தேர்தலில் முதல் தோல்வி பயம்.! பின்வாங்கியது திமுக.! துரைமுருகன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


எங்களுக்கு எதிரிதே இல்லை. எங்களுக்கு அதிமுக போட்டியும் இல்லை. நாங்கள் 234 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம் என்று பெருமை கூறிய திமுக., இன்று எங்களுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி என்று பின்வாங்கியுள்ளது.

234 தொகுதியிலும் தனித்தே போட்டியிடலாம் என்று முதல் ஆளாக பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி. 

கடந்த 3 மாதங்களுக்கு முன் திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி அல்லது தனித்துப் போட்டியிட காய் நகர்த்திய நிலையில், தற்போதைய நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ள காரணத்தினால், கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடியில் திமுக தலைமை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகவே ஆரம்பத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்த திமுக, தற்போது திமுக தலைமைக்கு கூட்டணி கட்சிகள், நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம், கேட்ட தொகுதிகளை தர வேண்டுமென்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களுக்கு போட்டி அதிமுக தான் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துரைமுருகன் பேசியதாவது,

"வரும் தேர்தலில் கட்சியினர் ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி பணியாற்றிட வேண்டும். நூறு வாக்குகளுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். வரும் தேர்தல் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் பலப்பரீட்சை போல் நடக்க உள்ளது. ஆளும்கட்சியினர் பண பலம், படை பலம் காட்டலாம். அதை தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை தி.மு.க.வினருக்கு உண்டு. தி.மு.க. வெற்றியையாராலும் தடுக்க முடியாது." என்று துரைமுருகன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan say about election opponent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->