வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை.!
Dr Ramadoss Say About Madhaiyan Release
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நோய்வாய்ப்பட்டுள்ள வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை; அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்; அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வராதது எந்த வகையிலும் நியாயமல்ல.
74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்." என்று மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Madhaiyan Release