வெளியான மரணச்செய்தி! இளம் வயதிலேயே பிரிந்ததை ஏற்றுக் கொள்வதற்கு மனம் மறுக்கிறது - மருத்துவர் இராமதாஸ் வேதனை! - Seithipunal
Seithipunal


ஆரணி நகர பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர்  இராஜசேகர் முதலியார் மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர்  இராஜசேகர் முதலியார் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

இராஜசேக முதலியார் மிகவும் துடிப்பான இளைஞர். அவரது செயல்பாடுகளால் ஆரணி நகர செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின்  வேட்பாளராக நிறுத்தப்பட்டார். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். 

பாட்டாளி மக்கள் கட்சியில் பெரிய உயரங்களை அடைந்திருக்க வேண்டியவர். மிகவும் இளம் வயதில் நம்மை விட்டு இராஜசேக முதலியார் பிரிந்ததை ஏற்றுக் கொள்வதற்கு மனம் மறுக்கிறது.

இராஜசேக முதலியாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆரணி பாமகவினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning to Rajasekar muthaliyar death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->