தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு தலைவர் போதும்.. ஆளுநர் ஆர்.என் ரவியை சாடிய திமுக எம்.பி..!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசும் பொழுது "தமிழ்நாட்டு மக்கள் கடந்த 50 ஆண்டுகால ஆட்சியில் ஏமாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்றே சொல்ல வேண்டும்" என பேசி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவியின் கருத்துக்கு திமுக எம்பி டி.ஆர் பாலு பதிலடி தந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ், தமிழன், தமிழ்நாடு ஆகியவை ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கசப்பான ஒன்று. தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் மாநில தலைவராக செயல்பட வேண்டாம். பீகார், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் இன்று எப்படி உள்ளது..?? தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாதா...? தமிழ்நாடு வளர்வது சிலருக்கு எரிச்சலை தந்துள்ளது. அதில் ஒருவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DmkMP TR Balu criticized One leader is enough for TNBJP


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->