ஜெயலலிதாவை கொன்றது மோடி தான்... தி.மு.க எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த பின்பும் அது குறித்த பல்வேறு சர்ச்சைகள் உலாவருகிது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து  எம்எல்ஏவாக உள்ள விளாத்திகுளம் மார்கண்டேயன் ஜெயலலிதா இறப்பு குறித்து பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் திமுக சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு மாபெரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன் "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறக்கும் வரை அந்த கட்சியில் இருந்தேன்.

ஜெயலலிதாவை மோடி தான் கொன்று விட்டார். இதற்கு காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்க போவதாக கூறியதால் பாஜக தான் கொன்றுவிட்டது என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ரூ.1,000 விரைவில் வழங்கப்படும்" என பேசினார். ஜெயலலிதாவை கொன்றது பாஜக தான் என திமுக எம்எல்ஏ பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA markandeyan said Modi killed Jayalalitha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->