திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கில்., தலைமறைவான திமுக பிரமுகர்!!
dmk meyar murder
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயராக இருந்த உமா மகேஸ்வரி, கடந்த வாரம் செவ்வாய்கிழமை பிற்பகலில் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் உள்ளிட்ட மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.
இதனையடுத்து, கொலை நடந்த இடத்தில சிசிடிவி காட்சியில் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான ஸ்கார்பியோ கார் ஒன்று அந்த பகுதியில் நின்றது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு செல்போன் நம்பர் மட்டும் அந்த டவரில் அதிக நேரம் காணபட்டது. கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தான் குற்றவாளி என ஒத்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த திமுக பெண் பிரமுகருமான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பவர் நேற்று கைது செய்யப்ட்டார். கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தின்படி திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டிலிருந்து கொள்ளையடிப்பட்ட 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்த போலீஸ், கொலை குறித்து மேலும் இருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கார்த்திக்கேயன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிப்பது, விசாரணை முடிக்கப்பட்ட ஆவணங்கள், இதர வழக்கு தொடர்புடைய தகவல்களை குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பெறும் பணி நடைபெற்று வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, கைது செய்யப்பட்ட கார்த்திகேயனின் தாயாரும் திமுக பெண் பிரமுகருமான சீனியம்மாள் தற்போது தலைமறைவாகி விட்டார்.இதையடுத்து, சீனியம்மாளை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.