திமுக மட்டும் இல்லைனா...! தமிழ்நாடு காட்டுமிராண்டிகள் வசம் தான்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தை அடுத்த குன்னூரில் திமுக சார்பில் இந்தி தணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சர் ஆன திருமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன் "திமுக என்ற இயக்கத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பை பெறும் அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்த்தகம் செய்து தமிழ்நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். மத்தியிலாலும் பாஜக அரசு இந்தியை எப்படியாவது நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டுக்காக வாழ்வை தியாகம் செய்த மகாத்மா காந்தியையும் நேருவையும் இருட்டடிப்பு செய்துவிட்டு சாவர்க்கரையும் பட்டேலையும் முன்னிறுத்தி வருகின்றனர். ஒரு சில சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் மட்டுமே அதிகார நாற்காலியில் அமர்ந்திருந்த நிலை மாறி சாமானியர்கள் வசம் வந்ததற்கு திமுக தான் காரணம். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் இல்லை என்றால் இம்மாநிலம் மீண்டும் காட்டுமிராண்டிகளின் வசம் போயிருக்கும். இதை மக்கள் உணர வேண்டும்" என பேசி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Duraimurugan spoke against Hindi suppression


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->