விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!!
dmdk Vijayakanth admitted to hospital again
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசகருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நலம் குறித்து பல வதந்திகள் பரவின. அதற்கு தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பிய பிறகு தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டதோடு அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தெரியவருகிறது.
English Summary
dmdk Vijayakanth admitted to hospital again