எடப்பாடியை ஓரம்கட்டி, ஓபிஎஸ்ஸிடம் துண்டை போட்ட கூட்டணி கட்சி.! - Seithipunal
Seithipunal


மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். திமுகவிற்கு மூன்று பதவிகளும் அதிமுகவிற்கு மூன்று பதவிகளும்  கிடைக்கும். சமீபத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் திமுக வேட்பாளர்களை மட்டுமே ஸ்டாலின் தேர்வு செய்தார். 

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பானது இன்னும் வெளியாகவில்லை. இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகப்படியாக இருக்கின்றது. அதிமுகவின் வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்றும், கூட்டணிக் கட்சியான தாமாக தலைவர் ஜி கே வாசன்க்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து தேமுதிகவினர் ராஜ்யசபா சீட் ஒன்று வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால், கேட்காத தாமகவிற்கு அதனை அதிமுக வழங்க இருப்பதாக வெளியாகும் செய்தியால் தேமுதிகவினர் அதிருப்தியில் இருக்கின்றனர். 

எடப்பாடியை ஏற்கனவே சுதீஷ் சந்தித்து பேசி இருந்த நிலையில்,அவருடன் பேசிய முடிவில் திருப்தி ஏற்படாத காரணத்தால் தபோது பன்னீர்செல்வத்தை சந்தித்து சுதீஷ் பேசி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk sutheesh meet with ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->