#தமிழகம் || அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த திமுக கோடி கம்பம் சாய்ந்து வாகனஓட்டி படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர்களை வரவேற்பதற்காக சாலை நடுவே நடப்பட்டிருந்த திமுக கொடி கம்பம் சாய்ந்து, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாலை ஓரங்களில் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்ரபாணி ஆகியோர் வர இருந்தனர்.

அவர்களை வரவேற்பதற்காக திமுகவினர் சாலை நடுவே சென்டர் மீடியன்களில் திமுக கட்சி கொடி கம்பத்தை நட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பேகம்பூர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திமுக கொடி கம்பம் சாய்ந்ததில் அன்வரின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அன்வரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindigul accident for dmk flag


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->