"ராஜதந்திரம் என்றால் அதுவல்ல" தினகரனின் திடீர் சூட்சும பேச்சு!!  - Seithipunal
Seithipunal


அமமுக வேட்பாளரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர், "ஆர் கே நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் உள்ள துரோகிகளை வீழ்த்த அனுப்பியிருக்கின்றனர்.

ஓபிஎஸ் துரோக சிந்தனையுடன் செயல்பட்டார். அதனால்தான் அவரை சசிகலா பதவியிலிருந்து விலக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சர் ஆக்கினார். நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வர் ஆகியிருப்பேன். 22 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொண்ட அதிமுகவினர் மூன்று எம்எல்ஏக்களை தகுதி இழப்பு செய்துள்ளனர்.

வருகின்ற 23ஆம் தேதி இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூறிய ஆர்பி உதயகுமார் சிறையில் இருக்கும் சசிகலா பற்றி இப்போது பேச வேண்டாம் என்கிறார். மந்திரவாதி கே.டி ராஜேந்திர பாலாஜி அடுத்த தேர்தலில் டெப்பாசிட் இழப்பார் இவர்கள் எல்லோரும் கசாப்புக் கடைக்காரர்கள் தான்.

திமுக ஆர் கே நகரில் டெபாசிட் இழந்தது. இடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான திமுக, அதிமுகவை வீழ்த்தி டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் துரோகம் செய்வதை தான் ராஜதந்திரம் என்கின்றனர். இது எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

பல அமைச்சர்கள் சொந்த தொகுதியில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். நாம் அவர்களோடு சேர முடியுமா? துரோகிகளை கூண்டோடு ஒழிக்க வேண்டும். உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சி அமைய மக்கள் ஆட்சி அமைய அமமுகவை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்" என அவர் பேசியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinakaran's sudden complimentary speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->