#சிவகங்கை || அதிமுக வேட்பாளரின் கணவர் மீது தாக்குதல்.!
devakottai admk candidate husband attack
அதிமுக பெண் வேட்பாளரின் கணவர் மீது, காங்கிரஸ் கட்சியினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பாக ராஜேஸ்வரி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே தேவகோட்டை நகராட்சியில் இரண்டு முறை நகர் மன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக தேர்தலில் களம் காண்கிறார்.
அதிமுக பெண் வேட்பாளர் ராஜேஸ்வரி என் கணவர் ராஜேந்திரன் தொடர்ந்து அவரின் மனைவிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று அவர் வல்லியப்ப செட்டியர் ஊரணி, காரியமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து, சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரின் அந்த புகாரில், முன்னாள் நகரமன்ற தலைவர் வேலுசாமி, அவரின் அண்ணன் மகன் தர்மராஜன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேவதி தர்மராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், அதிமுக வேட்பாளரின் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
devakottai admk candidate husband attack