#BREAKING : தடையை மீறிய திருமாவளவன், கனிமொழி சற்றுமுன் தடுத்து நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

அப்போது போலீசார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பிரதமர் கொடியேற்றும் கொடிக்கம்பத்தில் விவசாயிகளின் அமைப்பு கொடியையும், சீக்கிய மத கொடியையும் ஏற்றி தேசியக்கொடிக்கு  அவமரியாதை செய்தனர்.

இந்த சம்பவத்தால் விவசாயிகள் மீது பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கண்டனங்கள் காரணமாக விவசாய அமைப்புகள் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து கூறி வருகின்றன.

இருப்பினும், தலைநகர் டெல்லியில் எல்லை பகுதியான சிங்கு, காசிப்பூர் பகுதிகளில் விவசாயிகள் நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி எம்பி.,க்கள் காசிப்பூர் பகுதியில் உள்ள விவசாயிகளை சந்திக்க புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதால் சிறிது நேரம் பரபரப்பு உண்டாகியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DELHI KANIMOZHI THIRUMA STOPED


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->