யார் செத்தா எனெக்கென்ன! அசிங்கமான பிண அரசியலை கையிலெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்! கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி ரோகிணி பகுதியில், ஷாகில் என்ற இஸ்லாமிய இளைஞன், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், 16 வயது சிறுமி நிக்கியை 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். 

இந்த கொலை காட்சிகள் அடங்கியா சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொடூர கொலைகாரன் ஷாகிலை உத்திரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் அந்த பதிவில், "டெல்லியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிக வருத்தமானது, துரதிஷ்டமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். 

டெல்லி காவல்துறை மீதான பயம் அவர்களுக்கு போய்விட்டது. துணைநிலை ஆளுநர் அவர்களே சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு தானே உள்ளது. தயவு செய்து ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு முக்கியமானது" என்று தனக்கும், இந்த கொலைக்கும், சட்ட ஒழுங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரசியல் ரீதியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

ஒரு சிறுமி 20 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை கூட நினைக்காமல், அதை வைத்து பிண அரசியல் நடத்தும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கருத்தை பதிவிட்டு இருப்பதாக அவரை நெட்டிசன்கள் கிழித்து எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Cm Twit issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->