ஜனநாயக நாட்டில் மன்னர் ஆட்சியா..?!! திமுகவை சாடிய சி.வி சண்முகம்..!!
CVe Shanmugam alleges there is dmk monarchy in Tamil Nadu
விழுப்புரம் மாவட்டத்தை அடுத்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் பேசியதாவது "திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர்களின் வீட்டில் அமர்ந்து இருக்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்து வருகிறது. சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுகவிடம் எந்த நல்ல திட்டமும் இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஸ்டாலின் கனவு உலகத்தில் உள்ளார்.
ஜனநாயக நாட்டில் மன்னர் ஆட்சிபோல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா.? திமுக ஆட்சியில் எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை கஞ்சா அரசாங்க உள்ளது" என திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
CVe Shanmugam alleges there is dmk monarchy in Tamil Nadu