வி.சி.க கோட்டையில் களமிறங்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி.. கலக்கத்தில் திருமாவளவன்.!!
CV Shanmugam intensive consultation in Marakanam Union with admins
விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான சி.வி சண்முகம் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய என தீவிரமாக செயல்பட்டு வரும் சி.வி சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் ஒன்றியம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கிடைத்த தகவலை அடுத்து சிவி சண்முகம் மரக்காணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து நேரடியாகப் பேசியுள்ளார்.
மரக்காணம் மேற்கு ஒன்றிய அனைத்து கிளைச் செயலாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என அனைவரையும் அழைத்து சரமாரியாக விளாசியதால் இதனை சற்றும் எதிர்பாராத கழக நிர்வாகிகள் திக்கு முக்காடி போய் உள்ளனர். இதனால் வரும் நாட்களில் அதிமுக நிர்வாகிகள் மரக்காணம் ஒன்றியம் பகுதியில் தீவிரமாக களப்பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், அக்கட்சித் தலைவர் திருமாவளவனையும் கதி கலங்க வைத்துள்ளது.
English Summary
CV Shanmugam intensive consultation in Marakanam Union with admins