தமிழக மீனவர்கள் குறித்து மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் குறித்து மத்திய பாஜக அரசின் அக்கறையற்ற போக்குக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீன்பிடி வலைகளை அறுத்தும், அவற்றை சேதப்படுத்தியும் கடலில் வீசியுள்ளனர். அதுமட்டுமன்றி கடற்படையின் கப்பலை அதிவேகமாக ஓட்டி வந்து தமிழக மீனவர்களை மிரட்டியுள்ளனர்.

மேலும்,  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி மீனவர்களின் ஆறு விசைப் படகுகளையும், அதிலிருந்த 43 மீனவர்களையும் சிறைபிடித்து அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர். அதேபோல் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை சுற்றிவளைத்து 12 மீனவர்களையும் படகுகளுடன் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று அங்கு சிறை வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (20.12.2021) மேலும் 2 படகுகளுடன் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரண தீவு பகுதியில் அடைத்து வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி தொடர்ந்து அவர்கள் கொண்டு செல்லும் படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, சுட்டுக் கொல்வது என்பதை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தமிழக மீனவர்கள் மீது உள்ள அக்கறையற்ற போக்கையே இது வெளிப்படுத்துகிறது. 

தமிழ்நாடு அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் கூட அதற்கான நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் உள்பட  69 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு மத்திய அரசை, தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cpim say about tamilnadu fisher man


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->