#BREAKING || காங்கிரசுக்கு டிமிக்கி கொடுத்த பிரசாந்த் கிஷோர்.! சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு பிரபல தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் நான்கு முறை சந்தித்து காங்கிரஸில் இணைவு தொடர்பாகவும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிதம்பரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு தேர்தல் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரா விட்டாலும் அவர் தனது ஆலோசனைகளை வழங்கியதற்காக அவருக்கு நன்றியையும் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

வெளியான முதல் கட்ட தகவலின்படி பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கு கட்சியின் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS PRASHANT KISHOR


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->