காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் குஜராத் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதனால், மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி தமிழகத்தில் சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஆனாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழகத்தில் உயிரிழப்புகளும் அடுத்தடுத்து ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 7 நாட்களுக்கு டெல்லியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Jayakumar affected covid positive


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->