9 மாவட்ட தேர்தலும், மாநகராட்சி தேர்தல் எப்போது? தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியான தகவல்.!
coming april local body election in tn
பேரூரட்சி, நகராட்சி தேர்தல் முடிந்த பின் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சிகளுக்கு மட்டும் முதகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் இந்த தேர்தல் நடததப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
English Summary
coming april local body election in tn