500 நாளில்... 100 வாக்குறுதிகள் - கோவையில் அண்ணாமலை வாக்குறுதி.!
Coimbatore Annamalai promise
தமிழக பா.ஜ.க தலைவரும் கோவை பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், கோவை எப்பொழுதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கோவைக்கு 100 வாக்குறுதிகள் 500 நாளில் நிறைவேற்றப்படும். சரவணப்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பூங்கா அமைக்கப்படும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சரவணபட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். கோவையில் IIM கொண்டு வர வலியுறுத்துவோம்.
கோவையில் இருந்து ஆன்மீக தலங்களுக்கு சுமார் 10 புதிய ரயில்கள் இயக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். 250 மக்கள் மருந்தகம், ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Coimbatore Annamalai promise