செப்டம்பர் 15ல் வெளியாகிறது முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ‘திராவிட மாடல்' நூல்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது.

தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் திடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" கொள்கை கோட்பாடுகள் எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. 

விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு எம்.பி., பெற்றுக்கொள்கிறார். திராவிட மாடல் கோட்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தை தொகுத்து புத்தகமாக திமுக வெளியிடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin written book of Dravidian Model released on September 15


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->