அதிமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை 3 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபரை மிரட்டி பட்டாசு ஆலையை தனது நண்பனின் மனைவி பெயருக்கு பதிவு செய்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிவகாசி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து மாரியப்பன் பெயரும் சேர்க்கப்பட்டது.

இதனை எதிர்த்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து மாரியம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி காவல் உதவியாக ஆய்வாளர் முத்து மாரியம்மனுக்கு எதிராக முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் விசாரணையில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட்ட 6 பேருக்கு எதிரான வழக்கை காவல்துறை விசாரித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரிட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC ordered AIADMK ExMLA case to be complete within 3months


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->