#சென்னை || மக்களின் கவனத்தை ஈர்த்து., தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர்.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் பாமக வேட்பாளர் ஒருவர் தூய்மை பணி மேற்கொண்டும், தண்ணீர் பிடித்து கொடுத்ததும், பூ கட்டி கொடுத்தது உதவி செய்தும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவிக நகர் மண்டலத்தில், 92 வார்டு வார்டில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெண் வேட்பாளர், தூய்மை பணி மேற்கொண்டும், தண்ணீர் எடுக்க உதவி செய்தும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் இன்று திருவிக நகர் மண்டலம், பாமக பெண் வேட்பாளர் வெங்கடேசபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதியாக இந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

அனைவரிடமும் மாம்பழம் சின்னத்தை காண்பித்து, "ஒரு முறை எனக்கு வாய்ப்பு அளியுங்கள்., உங்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai thiruvika nagar pmk candidate election campaign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->