சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்த நரிக்குறவர்! வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது .

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். குறவர் சமுதாயத்தை சேர்ந்த இவர், தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ்பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சாதி சான்றிதழை பெற முடியாத சூழ்நிலையில் தவித்து வந்துள்ளார்.

மேலும் மகனை மேல் படிக்க வைக்க முடியாத நிலையில், விரக்தி அடைந்த வேல்முருகன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை தீயில் இருந்து காப்பாற்றிய போதும், படுகாயங்களுடன் வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் கட்ட தகவலின் படி நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன், அரசு நிர்வாகத்திடம் பலமுறை தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், மறுக்கப்பட்டதால் இதனை கண்டித்து உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து உயிரை விட முயற்சித்திருப்பது தெரியவந்துள்ளது.

அண்மையில் நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai HC velmurugan attempt suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->