அடுத்த ஆட்டத்துக்கு தயாரான பாஜக.! நேற்று பாஜக மேலிடம் வெளியிட்ட அதிரடி உத்தரவு.!
BJP posting for election
பாஜகவின் மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் மேலிடம் நேற்று நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழக பாஜக பொறுப்பாளராக கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநில தேர்தல் பொறுப்பாளராக கைலாஷ் விஜய்வர்கிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப், சண்டிகர், உத்தரகண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக பொதுச்செயலாளர் துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட், அருணாச்சலப்பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக திலிப் சாகியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.