முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு.. மேலும், ஒரு பாஜக நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக அறந்தாங்கி பாஜக நிர்வாகி பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முகநூலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாஜக நிர்வாகி பழனி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் கடலூர் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP admin arrested for slandering Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->