#BigBreaking || தமிழகத்தின் ஒரு வாக்குச்சாவடியில் மீண்டும் மறு வாக்குப்பதிவு.! சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புவனகிரி பேரூராட்சியின் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் வருகின்ற 24ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடலூர்  மாவட்டம், புவனகிரி பேரூராட்சியின் 4 வது வார்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருகின்ற 24ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று, மாநில தேர்தல் ஆணையம் சற்றுமுன்பு அந்த அறிவிப்பை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட, 4 வது வார்டில் உள்ள திருவள்ளுவர் தெரு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருக்கக்கூடிய அந்த வாக்குச்சாவடியில் மட்டும் 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வாக்குச் சாவடியில் இருந்து வாக்குச்சாவடி கோட்பாட்டை வாக்கு எந்திரத்தில் உள்ள திரையில் எந்த வாக்காளர் எந்த எத்தனை வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறித்த விவரங்கள் தெரியாத காரணத்தினால் அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhuwanagiri ward re election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->