பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்பு.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பகவான் கடந்த 16 ஆம் தேதி பதவியேற்றார்.  கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடைய செய்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக பகவந்த் மான் தேர்வானார். தற்போது பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தூரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக பதவி பதவி ஏற்பதற்கு முன்பு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhagwant mann ministers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->